Thursday, February 11, 2010

அருள்மிகு பாஸ்கரகுருக்கள், காம் காமாட்சி அம்பாள் ஆலயம், ஜேர்மனி! உம் தொண்டும்,புகழும் வாழ்க ! வாழ்கவே !! பல்லாண்டு வாழ்க! வாழ்கவே!!


அருள்மிகு பாஸ்கரகுருக்கள், காம் காமாட்சி அம்பாள் ஆலயம், ஜேர்மனி !
உம் தொண்டும்,புகழும் வாழ்க ! வாழ்கவே !! பல்லாண்டு வாழ்க! வாழ்கவே!!
என்றும் வாழும் எங்கள் ஆலயம்! ஜெர்மன் காம் நகர அம்பாள் தமிழ்ஆலயம்!!
அன்று தொட்டு அருமையாக நாம் வணங்கும் அன்னையே!எம்மை காப்பவள்!!
மன்று காத்த அன்னையே! மனிதர் போற்றும் அன்னையே!!ஆதி பராசக்தியே!!!
இன்றும் உலகில் நீதியை காக்க வந்த தேவியே! என்றும் உனது ஆட்சியே!!!

சைவத்தமிழ்மரபிலே!இந்துஉலககொள்கையில்நம்பிவந்தவர் நம் பாஸ்கரகுருக்களே!
வைபவங்கள்,சாத்திரம்,வழிமுறைகள்,பூசைகள்,மந்திரங்கள்,அர்ச்சனைகள் யாவுமே,
கைவந்த கலைகளாய் கவனமாக போற்றியே! கடமையுடன்,கண்ணியமாய்,காத்து!
எவ்வழிதான் நல்வழியோ !அவ்வழியே நம்வழி!அமைதிவழியே! தமிழர்வழி என!

ஆணித்தரமாய்எண்ணியே! அருமையானவழியிலே!அம்பாள்வழியில் நடந்திட்டார்!!
காணி,நிலம்வேண்டும் பராசக்தி!கோவில்,புலம்வேண்டும்!நம்மவர்வழிபடவே என!
ஏணிகொண்டு ஏறினார்!நம்மவரும் பின் தொடர்ந்தார்!உலகமக்கள் பின்தொடர்வார்!!
நாணிநின்றால்எதுவும்நடைபெறுமோநல்லுலகில்சைவஆலயங்கள் தான்வருமோ!

நம்மிளைஞர் நல்வழியில் செல்வதற்கு இவ்வாலயங்கள் வழிகாட்டுமன்றோ !!
எம்மவரின்அமைதிக்கு!ஒற்றுமைக்கு!ஆக்கபூர்வமுயற்சிக்கும்!அறிவுகூர்மைக்கும்!
உம்மவரின் முயற்சியும்!முன்னோடித்தனமும்!உழைப்பும்!உறுதியும்!உதவியன்றோ!
எம்மவர் என்றும்நன்றியும்!விசுவாசமும்!பற்றும்!பாசமும்!பண்பும்உடையவரன்றோ!
இணுவை நல்லையா சண்முகப்பிரபு- தலைவர்,
நோர்வே - திராம்மன் இந்து கலாசார மன்றம்-தொ.பே.0047 -91784271
http ://worldtamilhinduforum . blogspot . com
http://sarvadesatamilercenter.blogspot.com

No comments: