Thursday, July 16, 2009

கதிர்காமம் யாத்திரை 23 ஆம் திகதி ஆரம்பம்...!!!

கதிர்காமம் யாத்திரை 23 ஆம் திகதி ஆரம்பம்

[16 - July - 2009] [Font Size - A - A - A]

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பாத யாத்திரிகர் சங்கத்தின் கதிர்காம புனிதத்தல பாத யாத்திரை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
விஜயப்பா சுவாமிகளின் தலைமையில் சுமார் 150 பேர் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து எதிர்வரும் 23 ஆம் திகதி பாத யாத்திரையை ஆரம்பித்து கதிர்காமம் சென்றடையவுள்ளனர்.

இவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து யாத்திரை மேற்கொண்ட மேல் கூட்டத்தார் என அழைக்கப்பட்டவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு வழிவழியாக கைமாறி தற்போது விஜயப்பா சுவாமிகள் தலைமையில் சக்தி வாய்ந்த வேல் எடுத்துச் செல்லப்படுகின்றது.

யாத்திரையின் போது பாதையில் உள்ள சகல ஆலயங்களையும் தரிசித்து தங்கிச் செல்வதோடு மட்டக்களப்பில் இருந்து பாணமை வரை வீதி வழியாகவும் பாணமை முதல் கதிர்காமம் வரை காட்டு வழியாகவும் சென்று ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி கதிர்காமம் புனித ஸ்தலத்தினை அடையத் திட்டமிட்டுள்ளனர். பாத யாத்திரை பாவ விமோசனம் பெறவும் அருளைப் பெறவும் இலகுவான வழியாகும்.

Thinakkural.com - Site By Evosof.com

No comments: