Saturday, June 20, 2009

சிறப்புக்கூட்டு வழிபாடு....!!! ஞாயிற்றுக்கிழமை ஜூன் 21ம் திகதி ‘காலை 9.30 மணி

From: விஜி
Date: Fri, 19 Jun 2009 15:24:41 -0400
Local: Fri, Jun 19 2009 9:24 pm
சிறப்புக்கூட்டு வழிபாடு

> *வழிபாட்டு நாள்: ஞாயிற்றுக்கிழமைஜூன் 21ம் திகதி ‘காலை 9.30 மணிக்கு.*
> **
> **
> *திருச்சிற்றம்பலம்*
> **
> *மண்ணுலகத்தினில் பிறவி மாசற*
> *எண்ணிய பொருளெல்லாம் **எளிதில் முற்றுற*
> *கண்ணுதல் உடையதோர் களிற்றில் மாமுக*
> *பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்*
> **
> **
> சிவபுராணம்

> தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
> அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
> மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
> திருவாசகம் என்னும் தேன்


> நமச்சிவாய வாழ்க நாதன்தான் வாழ்க
> இமைப்பொழுதும் மென்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
> கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
> ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
> ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க.


> வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
> பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
> புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
> கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
> சிரங்குவிவா ரோங்குவிக்குச் சீரொன்கழல் வெல்க


> ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
> தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி
> நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
> மாயப் பிறப்பறுக்கும் மன்னடி போற்றி
> சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
> ஆராத இன்பம் அருளும் மலை போற்றி


> சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
> அவனருளாலே அவன்தான் தாள் வணங்கி
> சிந்தைமகிழச் சிவபுராணம் தன்னை
> முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்


> கண்ணுதலான் தன்கருணை கண்காட்ட வந்தெய்தி
> எண்ணுதற் கெட்டா எழிலார் கழல் இறைஞ்சி
> விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
> எண்ணிறந் தொல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
> பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
> .
> புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
> பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
> கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
> வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
> செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள்


> எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
> மெய்யே யுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
> உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
> மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
> ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே


> வெய்யாய் தணியாய் இயமான நாம் விமலா
> பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
> மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
> எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமாளே
> அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே


> ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
> ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
> போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
> நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
> மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே


> கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
> சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த
> பிறப்புறுக்கும் எங்கள் பெருமான்
> நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
> மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை


> ''மறைந்திட மூடிய மாய இருளை
> அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி
> புறந்தோல் போர்த் தெங்கும் புழு அழுக்கு மூடி
> மலஞ் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
> மலங்கப் புலனைந்தும் வஞசனையைச் செய்ய


> விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
> கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும்
> நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
> நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
> நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத்


> தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
> மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே
> தேசனே தேனார் அமுதே சிவபுரனே
> பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
> நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெடப்


> பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
> ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
> ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
> நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
> இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே


> அன்பருக் கன்பனே யாவையுமாம் அல்லையுமாஞ்
> சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
> ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
> ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
> கூர்த்த மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்


> நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
> போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
> காக்கும் எம் காவலனே காண்பரிய பேரொளியே
> ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
> தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணர்வாய்


> .மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
> தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
> ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
> வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடப்ப
> ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே


அல்லற் பிறவி அறுப்பானே ஓ வென்று
சொல்லற்கு அரியானைச் சொல்லி திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்
பல்லோரும் ஏத்தப் பணிந்து


திருச்சிற்றம்பலம்.


இதுவரை ஈழத்தில் நடந்த அசம்பாவிதங்களால் இறந்து போன அப்பாவி உயிர்களின்
ஆத்மசாந்திக்காக சிறப்பு வழிபாடு செய்யுமாறு அன்பர்கள் அனைவரையும் தயை கூர்ந்து
கேட்டுக்கொள்கின்றேன்.


...

No comments: